×

தச்சை பகுதியில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம்

நெல்லை, ஜன. 6: தச்சையில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பொதுமக்கள், அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என புகார் கூறினர். நெல்லை மத்திய மாவட்ட தச்சை பகுதி திமுக சார்பில், தச்சநல்லூர் அந்தோனியார் கோயில் அருகில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா தலைமை வகித்தார். பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஞானதிரவியம் எம்பி பங்கேற்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது தச்சநல்லூர் பகுதியில் சாலை, குடிநீர், கழிவுநீர் ஓடை, கழிவறை, தெருவிளக்குகள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை காணப்படுவதாக குற்றம்சாட்டினர். பின்னர் ஞானதிரவியம் எம்பி பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும்மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும். அப்போது பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும், என்றார்.

தொடர்ந்து அதிமுகவை நிராகரிப்போம் என கையெழுத்து இயக்கம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மணி, பொருளாளர் அருண்குமார், மானூர் ஒன்றிய செயலாளர் அருள்மணி, பகுதி செயலாளர்கள் அண்ணாத்துரை, அப்துல்கயூம், இளைஞரணி துணை அமைப்பாளர் பால்ஐசக், குமார், மாரியப்பன், தொண்டரணி செயலாளர் கருப்பசாமி, முருகன், பேச்சாளர் முத்தையா, மாவட்ட பிரதிநிதி பெரியதுரை, முத்துப்பாண்டி, இளைஞரணி மீரான், வார்டு செயலாளர் ராஜ், வட்ட செயலாளர்கள் பால்இசக்கிமுத்து, அழகு, குருநாதன், முருகன், ரவிகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK People ,meeting ,Village Council ,Tachai ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்